காமம் மிக்க கழிபடர்கிளவி
- வெள்ளிவீதியார்
v நீர்த்துறையிலே கழுவிய வெள்ளாடையின் மாசற்ற தூய வெண்ணிறம் கொண்ட சிறகினையுடைய
சிறிய குருகே!
v தலைவனின் ஊரில் உள்ள நீர், என்னுடைய ஊரினுள் வந்து பாய்கின்ற வயற்பரப்புடைய
நல்ல ஊரினைச் சேர்ந்த என் தலைவரிடம் சென்று,
v என்னுடைய அணிகலன்கள் கழண்டு விழும் துன்பத்தை இதுவரை சொல்லாமல் இருக்கிறாயே!
v நீ எம் ஊரினை அடைந்து, அங்குள்ள குளத்தில் உள்ள துறையிலே புகுந்து தேடிச்
சினையுள்ள கெளிற்று மீனைத் தின்கின்றாய்.
v அதன்பின், அவருடைய (தலைவர்) ஊருக்குச் செல்வாயாக; எம் ஊரில் வந்து உண்ட
நன்றி மறவாமல் அவரிடம் என் நிலைமையைக் கூறுவாயோ? அல்லது மறந்திடுவாயோ? ஒன்றினை ஆராய்ந்து
கூறு....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன