வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நற்றிணை 21 _ முல்லைத்திணை

 

வினைமுற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது

- மருதன் இளநாகனார்

v  பாகனே ! விரைந்து சென்றதால் வருந்திய குதிரைகளை உடைய வீரர்கள், இடையில் தொங்கவிடப்பட்ட வாளின் கச்சையின் பிணிப்பைத் தளர்த்தி, ஆங்காங்குத் தங்கித் தாங்கள் விரும்பியவாறு அமர்ந்து, மெல்ல நடந்து வருவாராக;

v  உருக்கப்பெற்ற நறுமணம் மிக்க நெய்யில் பாலைச் சிதறினாற் போன்ற குரலையுடைய அழகிய சிறுசிறு புள்ளிகளமைந்த காண்பவர்கள் விரும்பும் தன்மை கொண்ட கானங்கோழி; 

v  மழை நின்றபின், நீர் வடிந்துகொண்டிருக்கிற அகன்ற காட்டிலே, ஈரமணலை நன்றாகப் பறித்துத் தம் இரையாகிய நாங்கூழ்ப் புழுவைக் கவர்ந்து அதனைக் கொன்று, தன் துணையாகிய பெண்கோழிக்கு ஊட்ட வேண்டி, அப்பெடையை நோக்கி அழைக்கிறது. அத்தகைய காட்சியைப் பார்.

v  எனவே, நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுவரை தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!

v  {தலைவி எனக்காகக் காத்திருப்பாள்}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...