வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நற்றிணை 1 _ குறிஞ்சித் திணை

 

தலைவனின் பிரிவைத் தலைவிக்குத் தோழி உணர்த்துகையில் தலைவியின் கூற்றாக அமைந்தது

- கபிலர்

v  என் தலைவர், தான் சொன்னபடிச் செயலாற்றி நிற்பவர். திரும்பி வரக் காலம் தாழ்த்தினாலும் என் தலைவர் இனியவர். என்றும் என்னுடைய தோள்களைப் பிரிந்து அறியாதவர்.

v  தாமரையில் எடுத்த தேனைச் சந்தனமரத் தேன்கூட்டில் சேர்த்து வைத்திருக்கும் தேன் போல உயர்ந்தது அவருடனான நட்பு. அவருடைய அந்த நட்பு சான்றோர்களின் நட்பு போன்றது.

v  நீர் இல்லாமல் உலகம் இயங்காது. அதுபோல அவர் இல்லாமல் நம்மால் வாழமுடியாது என்பது தலைவருக்குத் தெரியும். அப்படிப்பட்ட நம்மைக் காத்து வந்திருக்கிறார்.

v  அப்படிப்பட்ட நம் தலைவர், பிரிவினால் நெற்றி பசந்து மெலியும் என்னைவிட்டுச் செல்வாரோ?

v  அப்படிச் செய்வதற்கு அவருக்குத் தெரியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...