வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நற்றிணை 148 _ பாலைத்திணை

 
 
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது

- கள்ளம்பாளனார்

v  தோழி! உன்னுடைய நிறத்தின் மென்மையைப் பார்த்தும், மெல்லிய இனிய சொல்லால் "நான் செல்லும் வழியில் உன்னால் வர இயலாது" எனப் பலவாறாகக் கூறியும், தலைவர் பொருளீட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

v  இந்நாளில், நெடிய குளத்தின் நீரில்லாத நீண்ட வழியிலே, சிவந்த அடியினையுடைய மரா மரத்தின் அருகில் மறைந்து நின்று, வளைந்த வில்லையுடைய கள்வர்கள் அதிகம் இருப்பர். 

v  அவ்வாறான நிலையிலும் அச்சங்கொள்ளாது,

v  மலையில் உள்ள குகைக்குள், பெரிய நகங்களை உடைய பெண்புலி, குட்டிகளை ஈன்றதனால் ஆகிய வேதனையும் (வலியும்), பசியும் தீரும்படி மிகுந்த கோபத்துடன் சிவந்த கண்ணையுடைய புலியானது, பெரிய கொம்பினையுடைய யானையின் புள்ளிகள் உடைய முகத்திற்கு நேராகச் சென்று பாயும்.

v  அவ்வாறான ஆபத்து மிகுந்த வழியின்கண்ணே தலைவர் சென்றிருக்கிறார்.

v  அவர் செல்லுவதனை அறிந்த நான் சிறிதும் வருத்தப்படவில்லை. நீயும் வருந்தாதே;

v  அவர் செல்லும் காரியம் அவர்க்குக் கைகூடுவதாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...