தமிழில் இலக்கண வரலாற்றுக் காலக்கட்டம் என்ற ஒன்றைப்
பகுத்துப் பார்த்துவிட முடியும். கி.பி. 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான இலக்கண வளர்ச்சி
என்பது குறைவு. அதன்பிறகு 19 ஆம் நூற்றாண்டளவில் மொழியியல் என்னும் துறை தோன்றி இலக்கண
வளர்ச்சி இல்லாத குறையினை நிறைவித்தது என்றே கூறலாம். அந்நேரத்தில் 20 ஆம் நூற்றாண்டளவில்
மொழியியல் அடிப்படையில் இலக்கணத்தைத் தோற்றுவித்தவர் டாக்டர் பொற்கோ. அந்த நூல்தான்
இக்காலத் தமிழ் இலக்கணம். தமிழிலக்கணம் சார்ந்த கோட்பாடுகள் சிலவற்றை இந்நூலில் குறிப்பிடுகிறார்.
சார்பெழுத்து, அடிநிலைக்கிளவி, சொற்பிரிப்பு, சாரியை, பால்பாகுபாடு, வேற்றுமை போன்றவற்றின்
கோட்பாடுகளை இந்நூல் பேசுகிறது. இலக்கண ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன