வியாழன், 15 டிசம்பர், 2022

பாரதி 🔥 🎉🎊



சங்கம் வைத்து வளர்த்தனர்

தமிழன்னையை 

இன்றும் பல சங்கங்கள் 

வளர்ந்துள்ளன 

தமிழ்தான் வளரவில்லை


இச்சமூகத்தில் சாதியம் அறுத்து – தீண்டாமை வெறுத்து

தனிமனிதனாய் களம்கண்டாய்

அன்றுன்னை உரைத்திட்டார் 

பித்தனென்று…

சமயம் பார்த்து 

இன்றுன்னை வைத்திட்டார் 

தமிழன்னைத் திலகமாக…


காசியில் அன்று நீ பெற்றது 

அடைக்கலம்

இன்று நீ

கேட்காமலேயே கிடைத்தது

மாபெரும் சங்கமம்


பல்நிறப் பூனைகளை 

அன்று நீ உன் வீட்டில் 

கண்டாய்…

இன்று 

இடம்தேடி அலைகின்றன

தெருக்களில்….


கவிஞனாக அல்ல 

மனிதனாகக் கூட 

ஏற்றுக்கொள்ளவில்லை அன்று….

எப்படியோ 

இன்று தலைவனாக 

உயர்ந்துவிட்டாய்

பிறந்தநாள் வாழ்த்துகள் 

சு.பா.🔥

💐🎉🎊

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...