சான்றோர்
மெய்ம்மறை
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது (இரண்டாம் பத்து)
- நிலம், நீர், காற்று, ஆகாயம் (வானம்) ஆகிய நான்கைப் போன்று அளவிட முடியாதவனே!
- நாள், கோள், நிலவு, சூரியன், நெருப்பு (தீ) இவ்வைந்தும் இணைந்த புகழ் பெற்றவனே!
- போரை மிகுதியாக விரும்பிய கௌரவர்கள் நூறுபேருடைய படையில் வீற்றிருந்த
கர்ணன் (அக்குரன்) போன்ற வலிமை வாய்ந்தவனே!
- தும்பைச்பூவைச் சூடிவரும் பகைவரை நேருக்கு நேர் நின்று களத்தில் அழிக்கும்
ஆற்றல் பெற்றவனே!
- எமனின் கோபத்தையும் அடக்கும் ஆற்றல் மிக்கவனே!
- முடிபொருந்திய செல்வம் மிகுந்த அரியணையில் வீற்றிருந்தாலும் தன் படைவீரர்களுக்கும்,
தம் மக்களுக்கும் (சான்றோர்களுக்கு) கவசம் போன்று விளங்குபவனே!
- வானுலகத் தேவர்களுள் மிக்க அழகு மிக்கவர்களாக விளங்கக்கூடிய பெண்களே
(ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை உள்ளிட்ட பலர்) வியந்துபோற்றும் அழகுடைய மனைவியை உடையவனே!
- மிக்க யானைகளை உடையதும், நீண்ட நெடிய கொடிபொருந்திய தேர்களை உடைய வேந்தனே!
- சூரியன் சுற்றிவருகின்ற கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்தை முழுதும் ஆண்ட உன்
முன்னோர்களைப் போல நீயும் புகழ்பெற்று நிலைத்து இவ்வுலகை ஆட்சி செய்வாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன