மரியெனும் கன்னி மாசறு குணத்தொடு
மறையோன் உரைகேட்டு மனத்தில் இறுத்தி
மக்க(ள்) இனமே மகிழ்ந்து களிக்க
மாதவப் பெரியோள் மகிழ்வுடன் ஈன்றாள்
கன்னி ஈன்ற கண்மணி காத்து
கருணை பொங்க கருத்தாய் நோக்கிக்
காவல் புரிந்த வளனும் மகிழ்வு
மார்கழி மாத மன்னவன் பிறப்பு
மனங்கள் தோறும் நனிகூர் மகிழ்வு
மகிழ்ச்சி நிலைக்க மனங்கள் குளிர
மன்னவன் பிறந்த நாளதைப் போற்றிக்
கூறுவேன் யானும் குறைவிலா வாழ்த்து
கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்
💐🌷✨👑
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன