மனித மனமெனும் மயக்க நிலங்களில்
கருணைப்பூவனம் குழுமிப்பூத்திட
புனித நாயகன் பிறந்த நாளிதில்
அலைகள் தொடுத்திடும் கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும் பாலின் வெண்மையாய்
இருள் உறு சிந்தையர்க்கும்
இன் அருள் சுரந்தவர்
அருளும் அபயமும் அளிக்கும் அற்புதர்
மறுஉறு பிறவி நோய்க்கு மருந்தானவர்
வேதநாயகர்
இன்று
நம்மில் / நம் மனங்களில் பிறந்தார்
இறவாத இன்ப அன்புடன்
முனைவர் போ. ஜான்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன